ஏமாறிய தருணங்கள்.
அப்பா எனும் அன்பான உறவை பிரிந்த போது ஏமாறினேன். எதிர்பார்த்த வாழ்க்கைமுறை அமையாத போது ஏமாறினேன். உயிரினும் மேலாய் நேசித்த காதல் கைவிட்ட போது ஏமாறினேன். கடைசிவரை உடன் இருக்க வேண்டும்என்று நினைத்த நட்பு திசை மாறி போகையில் ஏமாறினேன்.. இனி ஏமாற மாட்டேன் என நினைத்த அடுத்த கணமே ஏமாறினேன். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளிலும் ஏமாறினேன். ஏமாற்றமே வாழ்க்கை. வாழ்க்கையே ஏமாற்றம்.. என்றும் ஏமாற்றத்துடன். - பவித்ரா