Posts

Showing posts from 2017

கூடிப் பிரியாதே

             முள் மீது சேலை விழுந்தாலும்,  சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்.. ஆனால் ஒருபோதும் என்னை சேலையாக எண்ணாதே .. உன் எண்ணத்தை என் மீது திணிக்காதே. உன் எண்ணத்தை மாற்றிக் கொள்.. பிறரை மதிக்க கற்றுக்கொள். பெண்ணியம் போற்று என கூறவில்லை.. "மனிதம்" என்ற ஒன்றை மட்டும் புரிந்துகொள். எனக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது..அதன் குணம் அறியாமல் காயப்படுத்தாதே.. என்றோ ஓர் நாள் இது புரியும்  என்ற நம்பிக்கையுடன்..                               உனது நலம் விரும்பும்   "தோழி"

ஏமாறிய தருணங்கள்.

அப்பா எனும் அன்பான உறவை பிரிந்த போது ஏமாறினேன். எதிர்பார்த்த வாழ்க்கைமுறை அமையாத போது ஏமாறினேன். உயிரினும் மேலாய் நேசித்த காதல் கைவிட்ட போது ஏமாறினேன். கடைசிவரை உடன் இருக்க வேண்டும்என்று நினைத்த நட்பு திசை மாறி போகையில் ஏமாறினேன்.. இனி ஏமாற மாட்டேன் என நினைத்த அடுத்த கணமே ஏமாறினேன். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளிலும் ஏமாறினேன். ஏமாற்றமே வாழ்க்கை. வாழ்க்கையே ஏமாற்றம்.. என்றும் ஏமாற்றத்துடன்.         - பவித்ரா